தமிழகம்

புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட முனீஸ்வர் நாத் பண்டாரி அவர்களுக்கு பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிழ்வின்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) எம்.துரைசாமி, தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button