தமிழகம்

தேங்காய் எண்ணெய் சில அங்காடிகளில் விற்பனை: தமிழ்நாடு அரசுக்கு நன்றி! அனைத்து அங்காடிகளிலும் விரிவுபடுத்திடுக!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் (பொறுப்பு) பிஎஸ் மாசிலாமணி விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

பரீட்ச்சார்த்தமாக சமையல் பயன்பாட்டிற்கு பொது விநியோக அங்காடிகளில் தேங்காய் எண்ணெயை வழங்க உள்ளதாக தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

அமைச்சர் அவர்கள் கூறியது போல் கேரளாவில் சமையல் உள்ளிட்ட வாழ்வியல், பிற தேவைகளுக்குத் தேங்காய் எண்ணெயை மிகுதியாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது சரியானது. இதனால் எந்தவித உடல்பாதிப்பும் அங்கு இல்லை என்பது காலத்தின் உண்மை. எனவே, தமிழ்நாட்டில் இதை விழிப்புணர்வு இயக்கமாக நடத்தி காலப்போக்கில் மற்ற சமையல் எண்ணெய் விற்பனையை நிறுத்தி, தேங்காய் எண்ணெய் பயன்பாட்டைக் கூடுதலாக்கிட வேண்டும். மேலும், சத்துணவு கூடங்கள் மற்றும் அரசாங்க விடுதிகளிலும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்திட நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button