இந்தியா

கழிவுநீர் அகற்றியபோது 5 ஆண்டுகளில் 321 பேர் உயிரிழப்பு

புதுதில்லி, டிச.9- கழிவுநீர் தொட்டிகளை சுத் தம் செய்தபோது கடந்த 5 ஆண்டு களில் நாட்டில் 321 பேர் உயி ரிழந்துள்ளனர் என்று மக்களவை யில் ஒன்றிய அரசு தெரிவித துள்ளது. மனிதர்கள் கழிவுநீர் தொட்டி களை சுத்தம் செய்யும் முறையை ‘ஒழித்துவிட்டாலும்’ கடந்த ஆண்டுகளில் நாட்டில் ஆங் காங்கே சில சம்பவங்கள் நடக் கின்றன. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் முறையில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. கிரிஷ் சந்திரா, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. கேசினேனி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு மக்களவை யில் சமூக நீதிதித்துறை அமைச் சர் வீரேந்திர குமார் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறுகையில் “ நாட்டில் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடை செய்வது, கழிவுநீர் தொட்டி களை மனிதர்கள் சுத்தம் செய்வதில் இருக்கும் இலக்கு களை ஒன்றிய அரசு அடைய முடியும். கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலா ளர்களைக் கண்டுபிடித்து அவர் களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகள், திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன.

மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யத்தடை மற்றும் மறு வாழ்வுச் சட்டம் 2013-ன் கீழ், மனிதர்கள் கழிவுநீர் தொட்டி களை சுத்தம் செய்வது என்பது, கழிவுகளை சுமத்தல், அகற்று தல், எந்தவிதத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே கையா ளும்விதமாகும். இதைத் தடை செய்யும் முயற்சியில் மனிதர்கள் கழிவு களை அள்ளும் சம்பவங்களைப் பார்த்தால், அல்லது உலர் கழிப் பறைகள் இருப்பதைப் பார்த் தால் புகார் அளிக்க கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி தனியாக ஒரு செயலி உருவாக்கப்பட்டது” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் எழுப்பிய கேள்விக்கு சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் அளிக்கையில் “ கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டி களை சுத்தம் செய்யும்போது நடந்த விபத்துகளில் 321 தொழி லாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், மனிதக்கழிவுகளை அகற்றியபோது உயிரிழந்ததாக எந்த புகாரும் இல்லை. கழிவுநீர் தொட்டிகள், வழி காட்டு விதிகளின்படி கட்ட வில்லை என்பதால்தான் இந்த விபத்துகள் நடந்துள்ளன. அதிக பட்சமாக 2019-ஆம் ஆண்டில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில் 19 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது” எனத் தெரிவி்த்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button