இந்தியா

நாகாலாந்து படுகொலைக்கு வருத்தம் தெரிவிப்பது மட்டுமே போதாது

புதுதில்லி, டிச.9- விவசாயிகள் பிரச்சனை, எல்லை விவகாரம் குறித்து நாடா ளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முழுமையான அள வில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 8வது நாளை எட்டி யுள்ள நிலையில், அடுத்த கட்ட மாக 2 அவைகளிலும் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஏற்று பேசிய சோனியா காந்தி, ஒன் றிய பாஜக அரசின் செயல்பாடு களால் விவசாயிகள், சாதாரண மக்கள் என அனைவரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப் பதைச் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்க ளின் விலை ஏற்றத்தால் ஒவ் வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட் கடுமையாக ஏறிவிட்ட தாக அவர் குற்றம் சாட்டினார். தில்லி போராட்டக்களத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்ததை சுட்டிக் காட்டியுள்ள சோனியா, விவசாயிகளின் தியாகத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறினார். உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், விவசாயிகள் பிரச்சனை, எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முழுமையான அளவில் விவா திக்க வேண்டும் என்றும் கூறி னார். நாகலாந்து பிரச்சனைக்கு வருத்தம் தெரிவிப்பது மட்டும் போதாது என்று கூறிய அவர், அப்பாவி மக்கள் கொலை செய் யப்படுவதை தடுக்க ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். 12 எம்பிக்களுக்கு எதிரான இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், இந்த விவகாரங்களை முன் வைத்து நாடாளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பிய எம்பிக் களை அவர் அறிவுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button