தமிழகம்

களக்காடு – பவானி அம்மா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

பேராசிரியர் ந. முத்துமோகன் தாயார் திருமதி பவானி அம்மா (85) இன்று (30.10.2022) திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து, ஆழ்ந்த வேதனையுற்றோம்.

களக்காடு வட்டாரத்தில் கட்சி அமைப்புகளைக் கட்டியமைத்த முன்னோடியும், விவசாயிகள் சங்கத்தின் மூத்த தலைவருமான சிதம்பராபுரம் தோழர் எம். நடராஜன் வாழ்விணையரான திருமதி பவானி அம்மையார் கட்சி இயக்கங்களிலும் முனைப்போடு பங்கேற்றவர்.

கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தலைமறைவாகச் செயல்பட்ட தோழர்கள் கே. பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், பேராசிரியர் நா.வானமாமலை, பூதலபுரம் வேலுசாமி தேவர் போன்ற தலைவர்களைப் பாதுகாத்த குடும்பம் சிதம்பரபுரம் எம்.நடராஜன் – பவானி அம்மா குடும்பம். இவர்களுக்கு முனைவர் ந. முத்துமோகன், அஜாய், தாயம்மாள், கல்பனா, சித்ரா, விமலா ஆகிய மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். இவர்களில் அஜாய் காலமாகிவிட்டார். மூத்த மகன் முனைவர் ந.முத்துமோகன் தத்துவங்கள் குறித்த ஆய்வாளர். கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைக் குழு உறுப்பினர் என்பது குறிப்பிடப்பட்டது.

திருமதி பவானி அம்மாள் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button