தமிழகம்

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு வாபஸ்

சென்னை, பிப்.4- 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், கடந்த நவம்பர் 21-ம் தேதி தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகைக் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நகைக் கடனுக்கான வட்டி மற்றும் அசலில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வருபவர்களுக்கு கடன் தள்ளுபடி சலுகை வழங்காமல், எந்தத் தொகையும் செலுத்தாதவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான பயன் களை விவசாயிகளும், சுய உதவி குழுக்களும் பெறுவதற்கு வருமானம் மற்றும் பொருளாதார எல்லை ஆகி யவை நிர்ணயிக்கப்பட்டுள்ளபோது, தற்போதைய நகைக் கடன் தள்ளு படிக்கு அதுபோன்ற விதிகள் ஏதும் பின் பற்றப்படவில்லை. எனவே தமிழக அர சின் நகைக்கடை தள்ளுபடி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி யிருந்தார். இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கை வாபஸ் பெறுவதாக கடி தம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதி பதிகள், வழக்கை வாபஸ் பெற அனு மதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button