தமிழகம்

3 நாட்களில் காங். வேட்பாளர்கள் பட்டியல்

சென்னை,ஜன.28- காங்கிரஸ் கட்சியில் பேச்சு வார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட் டுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரி வித்துள்ளார். கர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதில் மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களை தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஜன.28 அன்று தொடங்கியது. அடுத்த மாதம் 4ஆம் தேதிவரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டதால் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தல், இடங்கள் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை யில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சென்னை அண்ணா அறிவால யத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி னார்.

இந்த ஆலொசனையில் அமைச் சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து இடப்பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் அண்ணா அறி வாலயம் சென்றனர். அவர்கள் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியில் பேச்சு வார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்த குழுவினர் திமுக மாவட்ட செயலாளர்களுடன் வார்டு பங்கீடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.காங்கிரஸ் வேட்பா ளர்கள் பட்டியல் மாவட்ட அளவில் 3 தினங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button