இந்தியா

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை: உ.பி. அரசின் தாமதமான அறிக்கை தாக்கல்- உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

டெல்லி: லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உத்தரப்பிரதேச அரசு தாமதமாக அறிக்கை தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வரும் 26-ந் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் இதுவரை 800க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு விவசாய சட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் பல்வேறு மாநிலங்களிலும் தொடருகிறது.
லக்கிம்பூர் படுகொலைகள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button