இந்தியா

ம.பி., ராஜஸ்தான் மாநில பெண்கள் போலீசில் புகார் 10 மாதத்திற்குள் 2-ஆவது வல்லுறவு வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ!

ஜெய்ப்பூர், நவ. 19 – ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதாப் லால் பீல். பாஜக எம்எல்ஏ-வான இவர் கடந்த 10 மாதங்களுக்குள் 2 பாலியல் வல்லுறவு வழக்கு களில் சிக்கியுள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக எழுந்த புகாரின் பேரில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, பிர தாப் லால் பீல் மீது சுக்கேர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்மீது இப்போதும் விசாரணை நடை பெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் கோகுவாண்டாவிலும், 37-வயது பெண் ஒருவரை பாலி யல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் பீல் சிக்கி யுள்ளார்.

“கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வேலைக்காக எம்எல்ஏ பீலைச் சந்தித்தேன். அப் போது, எனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2 ஆண்டுகளாக என்னை பாலியல் ரீதியாக பீல் பயன்படுத்தினார். வேலைவாங்கித் தருவதாகக் கூறியது மட்டுமல்லாமல், திரு மணம் செய்து கொள்வதாகவும் பீல் உறுதியளித்தார். ஆனால், வல்லபா நகரில் சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்த பின், பீல் என்னை தொலைபேசியில் அழைப்பதை நிறுத்திவிட்டார். இதுகுறித்து நான் கேட்டபோது என்னை மிரட்டினார்” என்று உதய்பூர் காவல் கண்காணிப் பாளர் மனோஜ் குமாரிடம் அளித்த புகாரில், பாதிக்கப் பட்ட பெண் கூறியுள்ளார். இதன் பேரில் பீல் மீது அம்பாமாதா காவல் நிலையத்தில் புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button