தமிழகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23வது மாநாடு 2022 மார்ச்  30,31 ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளியன்று நடைபெற்ற இம்மாநாட்டில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்க ராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தர ராசன், ஏ.கே. பத்மநாபன், சுதா சுந்தரராமன் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டு 553 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். 

மாநாட்டின் நிறைவில் 80 பேர் கொண்ட  மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஒரு இடத்திற்கு பின்னர் தேர்வு செய்வது என மாநாடு முடிவு செய்துள்ளது.

கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

15 பேர் கொண்ட செயற்குழுவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.

2022 ஏப்ரல் 6-10 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் 23வது அகில இந்திய மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து 50 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  5 பேர் கொண்ட மாநில கட்டுப்பாட்டுக் குழுவிற்கு தோழர். ப. சுந்தரராசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

புதிய மாநில செயற்குழு 

1.       கே. பாலகிருஷ்ணன்
2.       உ. வாசுகி
3.       பி. சம்பத்
4.       ப. செல்வசிங்
5.       எம்.என்.எஸ்.வெங்கட்டராமன்
6.      எஸ். நூர்முகமது
7.      பி. சண்முகம்
8.      என். குணசேகரன்
9.      கே. கனகராஜ்
10.     மதுக்கூர் ராமலிங்கம்
11.     சு. வெங்கடேசன்
12.     கே. பாலபாரதி
13.     ஜி. சுகுமாறன்
14.     கே. சாமுவேல்ராஜ்
15.     எஸ். கண்ணன்

நன்றி: தீக்கதிர்
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button