தமிழகம்

மணல் திருட்டுக் கும்பல் அராஜகம் ஒடுக்கப்பட வேண்டும்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் மணல் திருட்டுக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் அரசுப் பணியாளர்களிடம் ஏற்பட்ட பதற்றமும், அதிர்ச்சியும் இன்னும் தணியவில்லை. இப்போது சேலம் மாவட்டம், ஓமலூர் அருகில் உள்ள மானாத்தாள் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் (32) மணல் திருட்டுக் கும்பலால் திட்டமிட்டு தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மணல் திருட்டு கும்பலின் குற்றச்செயல்களை அரசு எல்லா முனைகளிலும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button