தமிழகம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், குடும்பத் தலைவர்களாக உள்ள பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு – தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வரவேற்பு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பாஜக ஒன்றிய அரசின் வஞ்சக செயலைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று (07.03.2023) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூபாய்.2.74 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு நூறு நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.

தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 600/= வழங்க வேண்டும்.

கண்ணியமான, சுயமரியாதை கொண்ட வாழ்க்கை அமைய, வீடில்லாத குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் முழுமானிய நிதி உதவி வழங்க வேண்டும்.

பட்டியல் சாதியினர், பழங்குடியினர் இளைய தலைமுறையினர் தொழில் தொடங்க குடும்பத்துக்கு தலா ரூ 10 லட்சம் முழு மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மார்ச் 8 சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், குடும்பத் தலைவர்களாக உள்ள பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது” என்று அறிவித்துள்ளார். முதலமைச்சரின் அறிவிப்பை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் நன்றி பாராட்டி வரவேற்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button