தமிழகம்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு தொகுப்பு

சென்னை,நவ.17- பொங்கல் பண்டிகைக்கு 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டா டும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங் களுக்கும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், “பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் வழங்கப்படும்; கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோது மை, உப்பு” ஆகிய பொருட்களும் வழங்கப்படும். 2 கோடியே 15 லட்ச த்து 48 ஆயிரத்து 060 குடும்பங் களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பும் வழங்கப்படும்: அமைச்சர் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை யுடன் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பும் இடம்பெற முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாகவும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை யை பொறுத்து டோக்கன் தொடர் பாக மாவட்ட ஆட்சியர்கள் முடி வெடுப்பார்கள் என்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரி வித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button