தமிழகம்

‘பேச்சைக் குறைத்து செயலில் திறமை’ – கே.எஸ்.அழகிரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவதைக் குறைத்துக் கொண்டதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ள நிலையில், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே.எஸ்.அழகிரி, ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுடன் பேசுவதையும் குறைத்துக்கொண்டுள்ளார்.
தோழமை கட்சிகளுடன் முதல்வர் அதிகம் பேசலாம் என்பது கருத்து. நட்பு கருதி எனது கருத்தை நான் கூறுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்ட வேண்டும். அதைத்தான் நான் தற்போது செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button