தமிழகம்

நீட் தேர்வு விலக்கு மசோதா: ஆளுநர் பரிசீலிக்க எத்தனை நாள் தேவை?

சென்னை, டிச.30- நீட் தேர்வு விலக்கு குறித்து பரிசீலிக்க ஆளுநருக்கு மேலும் எவ்வளவு காலம் தேவைப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கேள்வி எழுப்பி யுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: நீட் நுழைவுத் தேர்வு காரண மாக தமிழகத்து கிராமப்புற மாணவர்கள், மிகக் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளார் கள். 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த போதும், நீட் நுழைவுத் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற முடிய வில்லை. தாங்கள் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவு பகற் கனவாகவே முடிகிறது. இதன் காரணமாக அரியலூர் அனிதா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். இந்தநிலை மாற்றப்பட வேண்டும் என்றும், நீட் நுழை வுத் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விளக்களிக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் தொடர்ந்து கோரி வருகிறது. மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நீட் தேர்வு விலக்கு மசோதா, ஒருமனதாக கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு ஆளு நருக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இருமுறை ஆளுநரை நேரில் சந்தித்து முறை யிட்டுள்ளார். ஆனால் ஆளுநர் அசைந்து கொடுப்பதாகத் தெரிய வில்லை. இது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் மாளிகைக்கு கடிதம் எழுதினார். அதற்கு, மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக பதில் அளிக்கப்பட் டுள்ளது. கடந்த 4 மாதகால மாக பரிசீலனையில் உள்ள தாக தெரிவிப்பது வியப்பளிப் பது மட்டுமல்ல; வேதனையளிக்கி ன்றது. பேரவையின் மசோதா பரிசீலனையில் 4 மாதகாலமாக உள்ளது எனில், இன்னும் எத்தனை மாத காலங்கள் தேவைப்படும் என்பதனை ஆளுநர் மாளிகை பொதுமக்க ளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர், 100 நாட்க ளில் கோப்புகளுக்கு தீர்வுகாண வேண்டும் எனவும், இல்லை யெனில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்து இருப்ப துடன், அவர்களது மாதாந்திர ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் என பணியாளர்களுக்கு உத்தர விட்டுள்ளார். நாட்டிற்கே முன்னு தாரணமாக விளங்குகிறது ஆட்சியரின் உத்தரவு. அது போல் தமிழக ஆளுநர் முன்னு தாரணமாக விளங்க வேண்டும் என விரும்புகின்றோம். காலதா மதம் செய்யாமல் குடியரசுத் தலை வருக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button