தமிழகம்

நீட் சட்டமுன்வடிவு – தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு

இன்று 5/02/2022 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் ,அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்திட சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களுடனான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பின்வருமாறு:

சமூகநீதியின் ஆணிவேராகத் தமிழகம் திகழ்கிறது சமூகநீதியின் ஆணிவேரில் வெந்நீர் ஊற்றுவது போல ஒன்றிய அரசு மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வில் நீட் தேர்வை திணித்ததால் கிராமப்புற ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் அரசு பள்ளியில் தமிழ்வழி படிக்கும் மாணவ மாணவியர்களின் மருத்துவ படிப்பிற்கான கனவு சிதைந்து போகிறது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் கடந்த 13.09.2021 அன்று சட்டமன்றத்தில் தமிழ்நாட்டிற்க்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டுமென்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 5 மாத காலமாகியும் ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியிருப்பது 7 கோடி தமிழக மக்களை அவமதிக்கின்ற செயல் ஆகும்.

கூட்டாட்சி தத்துவத்திற்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் எதிரானது. தமிழக ஆளுநர் மேதகு ரவி அவர்கள் ஒரு மாநிலத்திற்க்கு ஆளுநராக செயல்படாமல் ஒரு கட்சியின் தலைவராகச் செயல்படுவது கண்டனத்துக்குரியது. ஆகவே ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட அரசியல் தீர்மானம் ஆன சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி நீட்டிலிருந்து விலக்கு கோரி சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கின்ற தீர்மானத்தை வரவேற்கின்ற அதே வேளையில் சட்டமன்றத்தில் பங்குபெற்றுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் வெளியில் ஒருமித்த கருத்துடன் இருக்கின்ற மற்ற கட்சிகள், அமைப்புகள், மாணவர் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து தங்கள் தலைமையில் வலுவான ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தேசிய அளவில் பாஜகவை தவிர்த்து நீட்டிற்கு எதிராக உள்ள மற்ற மாநில முதலமைச்சர்களை தங்கள் தலைமையில் அணி திரட்ட வேண்டும். சட்டவல்லுநர்களை ஆலோசித்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சமூகநீதியை நிலைநாட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button