தமிழகம்

தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் திரும்பப் பெறப்பட்டதற்கு வரவேற்பு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பில் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023 நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் வேலை நேர உரிமையை மறுக்கும் இச்சட்டத்திற்கு எதிராக தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர், தொழிலாளர் துறை அமைச்சர், தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசிய நிலையில், தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்தார்.

இன்று (01.05.2023) தொழிலாளர் உரிமை தினமான 137 – வது மே தினத்தில் பங்கேற்ற முதலமைச்சர், தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 2023 முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது என அறிவித்துள்ளார். இந்த மகிழ்வான அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

தொழிலாளர்கள், ஜனநாயக சக்திகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த முதலமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button