தமிழகம்

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக திமுக தலைமையில் ஆட்சி அமைந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டது. புதிய ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அனைவருக்கும் நிதியமைச்சரின் விளக்கம் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நிதியமைச்சரின் விளக்கம் எந்த வகையிலும் ஏற்றத்தக்கதல்ல, சரியுமல்ல. இதன்மீது மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிப்படி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button