தமிழகம்

கோவையில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்ட 10 வது மாநாடு ஏப்ரல் 10 ல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி வெங்கிட்டாபுரம் பா. கமலநாதன் நினைவு மேனிலைப்பள்ளி வளாகத்தில் மார்ச் 25 ல் நடைபெற்றது. 105 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சுற்றுச்சூழல், இயற்கை, மதநல்லிணக்கம் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் சிறந்த ஓவியங்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் அப்போதே வழங்கப்பட்டன. பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட மாநாட்டில் பரிசுகள் வழங்கப்படும்.
மேனாள் மாநகராட்சி உறுப்பினர் கே.புருசோத்தமன், இந்நாள் உறுப்பினர் மல்லிகா புருசோத்தமன், ஓவியர்கள் செல்வின், ஞானி, தோழர் அசரப் அலி, பேரா.த.திலிப்குமார், மாணவர் பெருமன்றத்தின் மௌ.குணசேகர், கலை அஸ்வினி, பிரசாந்த், பூபேஷ் மன்றத் தோழர்கள், ப.பா.ரமணி, எல்.ஜான் ஆகியோர் போட்டி நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button