இந்தியா

கொத்துக் கொத்தாக காங்கிரசில் இணையும் பாஜக தலைவர்கள்!

இம்பால், பிப்.3- மணிப்பூர் மாநிலத்திற்கான வேட்பா ளர் பட்டியலை அறிவித்த நாள்முதலே பாஜகவுக்குள் குத்து-வெட்டு துவங்கி விட்டது. சொந்தக் கட்சி அலுவலகங்க ளையே சூறையாடிய பாஜகவினர், பிர தமர் நரேந்திர மோடி, முதல்வர் பீரேன் சிங் ஆகியோரின் உருவபொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர். இதனால் மாநி லம் முழுவதும் பாஜக அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. இந்நிலையில்தான், பாஜக முன்னாள் எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் பலர், பாஜகவிலிருந்து விலகி, காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி (NPP) கட்சி யில் சேர்ந்து வருகின்றனர். மொய்ராங் தொகுதி பாஜக எம்எல்ஏ சரத் சந்திர சிங் தனது ஆதரவாளர்களு டன் காங்கிரஸில் இணைந்துள்ளார். அதேபோல சீக்மாய் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிங்தோ ஜாம் பிரென், நிங்தோஜாம் ஜாய்குமார் சிங் உள்ளிட்டோரும் காங்கிரசில் இணைந் துள்ளனர்.

இவர்கள் அல்லாமல் பாஜக-வைச் சேர்ந்த மேலும் 12 தலைவர்கள் காங்கிரசுடன் பேச்சவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. “பாஜகவிலிருந்து பலர் எங்களை தொடர்பு கொண்டு காங்கிரசுக்கு விசு வாசமாக இருப்போம் என வாக்குறுதி அளித்துள்ளனர். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்” என்று காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் செய்தித் தொடர் பாளர் கே.எச். தேவபிரதா தனது பேட்டி யில் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில பாஜக எம்எல்ஏ-க்கள், ஓரிரு நாட்களில் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியில் இணைவார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் தற்போதைய ஆளும் கூட்ட ணியில் பாஜக, தேசிய மக்கள் கட்சி (NPP) ஆகியவை ஒன்றாக இருந்தா லும், தேர்தலில் தனித்தனியாகவே போட்டியிடுகின்றன. மாநிலத்தின் முன்னணி பாஜக தலைவர் எல். சஞ்சோய் சிங் என்பிபி-யில் சேர, என்பிபி தலைவர் லெத்பாவோ ஹூகிப் பாஜகவில் இணைந்தார். இது, இருகட்சிகளுக்கும் இடையே பூசலை அதிகமாக்கியுள்ளது. இதனால் மணிப்பூரில் புதிய திருப்பம் ஏற்பட்டு, காங்கிரசுக்கு சாதகமான சூழல் உருவாகி இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button