இந்தியா

குஜராத்தில் கோட்சேவுக்கு சிலை காங்கிரசார் உடைத்தெறிந்தனர்!

அகமதாபாத், நவ.17- மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இந்து மகா சபை யினர் சிலை வைத்த நிலையில், அதனை காங்கிரஸ் கட்சியினர் தகர்த்தெறிந்தனர். ஜாம்நகரின் முக்கிய பகுதி யில், கோட்சேவுக்கு சிலை வைக்க இந்து மகாசபை வைத்த கோரிக் கையை, நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்க மறுத்த நிலையில், அந்த சிலையை அனுமன் ஆசிரமத்தில் நிறுவினர். இந்நிலையில், ஜாம் நகர் நகர காங்கிரஸ் தலைவர் திகுபா ஜடேஜா தலைமையில்  சென்ற காங்கிரஸ் கட்சியினர்,  அனுமன் ஆசிரமத்தில் நிறு வப்பட்டிருந்த கோட்சே சிலை யை தகர்த்தெறிந்தனர். ஆகஸ்ட் மாதமே கோட்சே சிலையை நிறுவ முயற்சித்துள்ள னர். சிலை செய்வதற்கான மண் ணையும் நாதுராம் கோட்சே அடைக்கப்பட்டிருந்த ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மத்திய சிறையில் இருந்து எடுத்து வந்துள்ளனர். அந்த மண்ணை வைத்தே, அவர்கள் கோட்சே சிலையை வடித்துள்ளனர். இதேபோன்ற சிலையை மத்தி யப் பிரதேசத்திலும் நிறுவ இந்து மகாசபையினர் முயன்று வருவ தால் ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு மகாத்மா காந்திக்கு களங்கம் ஏற்படுத்தும் இந்து மகா சபையினரை கண்டிக்கவும் ஹரி யானா சிறைக்குள் சென்று மண் எடுத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை கைது செய்ய வும் வேண்டும் என்றும் கோரிக்கை கள் எழுந்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button