தமிழகம்

ஒன்றிய, மாநில அரசுகள் ஏன் அரசியல் சட்டத்தை காக்க நடவடிக்கையில் இறங்கவில்லை? கே.சுப்பராயன் எம்.பி கேள்வி

கே.சுப்பராயன் எம்.பி முகநூல் பதிவில் இருந்து

சமீப சில நாட்களுக்கு முன்னர், ஹரித்வாரில், தங்களைத் தாங்களே ‘துறவிகள்’ என்று நாமகரணம் சூட்டிக்கொண்ட ஒரு கூட்டம், விநாச கால விபரீத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு வெறிக்கூத்தாடியுள்ளது!

இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷம் கக்கிய அந்தக் கூட்டம், அவர்களுக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தைத் தொடங்குமாறு இந்து மக்களை உசுப்பிவிட்டு ஊளையிட்டுள்ளது!

ஒன்றியத்திலும், மாநிலத்திலும் பேயரசுகள் நடப்பதால் பிணந்தின்னத் துடிக்கிறது ஒரு கூட்டம்! சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா இங்கு? காட்டாட்சி தொடங்கி விட்டதா?

தன்னையே துறந்தவனன்றோ துறவி? இந்த தேசவிரோதக் காட்டுமிராண்டித்தனத்தை, அரசியல் சட்டத்திற்கு எதிரான பகிரங்க போர்ப் பிரகடனத்தின் மீது ஒன்றிய, மாநில அரசுகள் ஏன் வழக்குத் தொடரவில்லை? ஏன் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை?

ஒன்றிய, மாநில அரசுகள் ஏன் அரசியல் சட்டத்தை காக்க நடவடிக்கையில் இறங்கவில்லை?

இந்த சட்டவிரோத போர்ப் பிரகடனத்தின் மீது, உச்சநீதிமன்றம் தானே முன்வந்து வழக்கைப் பதிவு செய்ய வேண்டும்! நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

நாடதிரக் குரல் எழுப்புவோம்!

கே.சுப்பராயன் MP

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button