தமிழகம்

இலங்கை அரசின் ஏல அறிவிப்புக்கு கண்டனம். ஒன்றிய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதும், அவர்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உடைமைகளை பறிமுதல் செய்வதும் தொடர்கிறது.

இலங்கை அரசின் மீனவர் விரோதக் கொள்கைகளை கண்டித்து தமிழ்நாட்டு மீனவர் கிராமங்கள் அனைத்தும் போராடி வருகின்றன. இது தொடர்பாக ஒன்றிய அரசு, இலங்கை அரசுக்கு வலிமையான குரலில் கண்டனம் தெரிவித்து, எதிர்காலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் ஒத்த கருத்துடன் வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் விடுதலை அடையும் போது, அல்லது அவர்கள் விடுவிக்கப்படும் போது, அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும், உடைமைகளையும் திருப்பி வழங்க இலங்கை கடற்படை முன்னதாக ஒப்புக் கொண்டதற்கு மாறாக இலங்கை அரசு நடந்து கொள்வது, மீனவர்கள் வாழ்வாதார உரிமைக்கு எதிரானது என்பதை இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறி, தமிழ்நாட்டு மீனவர்கள் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுக்க வேண்டும் என ஒன்றிய அரசையும், அயலுறவுத் துறை அமைச்சரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button