தமிழகம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி தலைவர் மூர்த்தி படுகொலை

இரா.முத்தரசன் கண்டனம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியத்தின் தாளவேந்திரம் ஊராட்சியின் தலைவர் மூர்த்தி ஆக. 02 இரவு கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரான மூர்த்தி, மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்ற ஊராட்சித் தலைவராக திகழ்ந்தவர். இவர் நேற்று (செவ்வாய்கிழமை) வாகனத்தில் சென்ற கொண்டிருந்தபோது சமூகவிரோதிகள் வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். சமூகவிரோதிகளின் கோழைத்தனமான தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய, இதற்கு துணை போன அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் சந்து, பொந்துகளில் தப்பி விடாமல் தண்டிக்கும் வகையில் காவல்துறையினர் உறுதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன், உயிரிழந்த ஊராட்சி தலைவர் மூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button