அறிக்கைகள்மாநில செயலாளர்

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

ஆளுநரின் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பதாக, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.. 

நாட்டின் 77 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேதகு ஆளுநர் 15. 08. 2023 ஆம் தேதி மாலையில் வழங்கும்  தேநீர் விருந்துக்கு  வருமாறு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். அது கிடைக்கப் பெற்றோம்.

ஆனால், ஆளுநரின் நடவடிக்கைகளும், செயல்களும் அவரது அதிகார எல்லைகளை மீறி இருப்பதாலும்,  குறிப்பாக ‘நீட்’ தேர்வுக்கான விதிவிலக்கு கேட்ட மாணவரின் பெற்றோரை அவமதித்து, தற்போது அவரது பொறுப்பில் இல்லாத “நீட்” விலக்கு மசோதாவிற்கு எப்போதும் கையெழுத்து போடமாட்டேன் என ஆத்திரமூட்டி, அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையிலும் ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்வை புறக்கணிப்பது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது என மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button