இந்தியா

ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகான் புல்லரிப்பு பிரதமர் மோடியிடம் கடவுளின் அம்சங்களைக் காண்கிறேன்

பனாஜி, பிப். 4 – பிரதமர் நரேந்திர மோடியிடம், மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் அம்சத்தைக் காண்பதாக மத்தியப் பிரதேச பாஜக முதல் வர் சிவராஜ் சிங் சவுகான் நெக்குருகியுள்ளார். கோவா சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சிவராஜ் சிங் சவுகான் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போதுதான், பிரதமர் மோடியை கடவுள் என்று கூறி தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி மனிதசக்தி அப்பாற்பட்ட நபர். நான் அவரிடம் கடவுளின் அம்சங்கள் இருப்பதைக் காண்கிறேன். அவர் முடிவில்லாத சக்திகளின் களஞ்சி யம். அவர் ஒரு சிறந்த மனிதர். ஒருவரால் எப்படி இவ்வளவு வேலைகள் செய்ய முடி யுமோ தெரியவில்லை..? நான் முத லமைச்சர் என்பதாலும், பாஜக-வைச் சேர்ந்த வர் என்பதாலும் இதைச் சொல்லவில்லை. என் மனத்தில் பட்டதையே கூறுகிறேன். நம் நாட்டிற்கு நரேந்திர மோடி பிரதமராகக் கிடைத்திருப்பது நாம் செய்த புண்ணியம். அவர் ஒரு நம்ப முடியாத ஆளுமை கொண்ட வர். சிறந்த சிந்தனையாளர்” என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். மேலும், “காங்கிரஸ் ஆட்சியில், நாங்கள் இந்தியாவிலிருந்து வருகிறோம் என்று சொன்னால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் புறக்கணித்தனர். பெருமையுடன் பார்க்க மாட்டார்கள். ஆனால் நரேந்திர மோடி வெளி நாடுகளில் இந்தியாவின் பெருமையை மீட் டெடுத்துள்ளார்” என்றும் சவுகான் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button