இந்தியா

மோடியின் பேச்சை மதிக்காத பாஜக அமைச்சர்கள் -எம்.பி.க்கள்!

புதுதில்லி, டிச.21- பாஜக உறுப்பினர்களின் வருகை குறைந்து வருவதற்கு, பிரதமர் நரேந் திர மோடி ஏற்கெனவே அதிருப்தி தெரி வித்திருந்தார். டிசம்பர் 7-ஆம் தேதி பாஜக நாடா ளுமன்ற உறுப்பினர்களுடன் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மோடி, வருகைக் குறைவை சுட்டிக்காட்டி உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என் றும் எச்சரித்திருந்தார். ஆனால், இவ்வளவுக்குப் பிற கும், திங்களன்று நாடாளுமன்ற கேள்வி – நேரத்தின்போது, பாஜக அமைச்சர்கள், எம்.பி.க்கள் என 14 பேர் அவையில் இல்லாமல் டிமிக்கி கொடுத்தது தெரியவந்துள்ளது. இவர்களில் முக்கியமாக எம்.பி.க்க ளுக்கு உத்தரவிடக்கூடிய இடத்திலி ருக்கும் பாஜக மக்களவைக் கொறடா ராகேஷ் சிங்கும் ஒருவர் என்பது பாஜக தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சுகந்தா மஜும்தார், வினோத் குமார் சோன்கர், எல் எஸ் தேஜஸ்வி சூர்யா, சங்கன்னா அமரப்பா, சுனில் குமார் சிங், ரக்ஷா நிகில் காட்சே, பிபி சௌத்ரி மற்றும் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோரும் அவையில் இல்லை. காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகாய்தான், இந்த உண்மையை நாடாளுமன்றத்தில் வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button