இந்தியா

போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி உ.பி. பாஜக எம்எல்ஏ கபு திவாரி பதவி இழந்தார்!

லக்னோ, டிச. 10 – உத்தரப்பிரதேச மாநிலம் அயோ த்தியாவில் உள்ள கோசைகஞ்ச் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பின ராக இருந்தவர் கபு திவாரி என்ற இந்திர பிரதாப். இவர் 1990-ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள சா ஹேத் டிகிரி கல்லூரியில் படித்துள் ளார். எனினும் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பில் தோல்வியடைந்துள் ளார். ஆனால், இந்திர பிரதாப் போலி யான மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்து பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இதுதொடர் பான உண்மை தெரியவரவே இந்திர பிரதாப் மீது கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த அக்டோபர் 10 அன்று இந்திர பிரதாப் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றால், சம்பந்தப் பட்டவர் பதவி இழக்க நேரிடும் என்ப தால், தற்போது இந்திர பிரதாப் தனது எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button