இந்தியா

பிரதமர் மோடியின் மிரட்டல் பேச்சு என்னை சிரிக்கவே வைக்கிறது..!

டேராடூன், பிப். 11 – “நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்களில் ஒன்றிய அமைச்சர் கள் விரிவான விளக்கங்கள் அளிக்கிறார்கள். ஆனால் ராகுல் காந்தி அவையில் அமர்வதும் இல்லை, அமைச்சர்களின் பதிலைக் கேட்பதும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் நான் எப்படி அவருக்கு பதிலளிப்பது?” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது பேட்டியில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், மோடியின் பேச்சுக்கு உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள் ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: “பிரதமர் மோடியைக் கண்டு நான் பயப்படவில்லை. அவரது திமிர் என்னை சிரிக்கவே வைக்கிறது. அவரது பேச்சை நான் கேட்வில்லை என்று பேட்டி ஒன்றில் மோடி கூறி யுள்ளார். அவர் சொல்வது புரி கிறதா? அதாவது, மோடி பேச்சை நான் கேட்க வேண்டுமாம். நான் ஏன் அவர் பேச்சை கேட்க வேண்டும்? நான் அவர் பேச்சைக் கேட்கா மல் இருக்கிறேன் என்றால், எனது நிலையில் நான் உறுதியாக இருக்கிறேன்… நான் பின்வாங்க வில்லை என்று அர்த்தம். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலமான அழுத்தம் என்னிடம் வேலை செய்யாது என்று அர்த்தம். மோடி ஆட்சியின் கீழ் இந்தியா இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. ஏழைகள், பணக்காரர்கள் என பிரித்து விட்டார். பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி போன்ற முடிவுகளை அமல்படுத்தி சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள், விவ சாயிகள் மற்றும் தொழி லாளர்களின் வாழ்க்கையை மோடி சீரழித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் 23 கோடி மக்களை மீண்டும் வறுமையில் தள்ளி இருக் கிறார். பணமதிப்பு நீக்க நட வடிக்கையால் நாட்டில் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா? இல்லை. மாறாக, கறுப்புப் பணம் வெள்ளையாகி பாஜக கைக்கு கிடைத்துவிட்டது” இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button