இந்தியா

பாஜகவில் இருந்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் பெரிய குற்றம் செய்தால் பரிசும் பெரிதாக கிடைக்கும்!

லக்னோ, நவ.17- பாஜக-வில் இருந்தால் என்ன குற்றங்களை வேண்டுமானாலும் செய்யலாம்… அந்த குற்றங்களை போஷித்து நல்ல பரிசுகளை அளிப் பார்கள் என்று சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவர் ஓம் பிர காஷ் ராஜ்பர் கடுமையாகச் சாடி யுள்ளார். சமாஜ்வாதி கட்சிக் கூட்டணி யில் இடம்பெற்றுள்ள ஓம் பிரகாஷ் ராஜ்பர், மாபியாவாக இருந்து அர சியல்வாதியான முக்தர் அன்சாரி யை அண்மையில் சிறையில் சென்று சந்தித்தார். இதனை பாஜக-வினர் கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு ராஜ்பர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.  “தற்போது நாட்டில் கிரி மினல்கள் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட மதம், சாதியைச் சேர்ந்த கிரிமி னல்கள் மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்து வருகிறது. முஸ்லிம்கள், பிராமணர்கள், தலித்துகளை இலக்கு வைத்து பாஜக அரசு அடக்கி ஒடுக்கிக் கொண்டிருக்கி றது. 

நான் பெரிய பெரிய மாபியாக் களை சிறையில் வைத்து பார்த்தி ருக்கிறேன், இவர்களுக்கு பாஜக இனிப்புகள் வழங்கி ஊக்குவித்து வருவதையும் பார்க்கிறேன். ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போதே, நான் பாண்டா சிறையில் முக்தர் அன்சாரி யை நேரில் போய் சந்தித்திருக்கி றேன். 8 முறை அவரை நான் சிறை யில் பார்த்திருக்கிறேன் அப்போ தெல்லாம் பாஜகவுக்கு பிரச்சனை யில்லையா? பாஜகவுடன் இருந்து என்ன குற்றங்களை வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு கேள்வியே இல்லை. சஞ்சய் நிஷாத் சமீபத்தில் பகவான் ராமர், தசரதனின் மகனே அல்ல என்றார், பாஜகவுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்கிறதா? துணை முதல்வர் தினேஷ் சர்மா ஒருமுறை சீதாதேவி டெஸ்ட் டியூப் பேபி என்றார், பாஜக என்ன செய்து விட்டது? ஒன்றும் செய்யவில்லை. பாஜக-வில் இருந் தால் குற்றங்களை போஷித்து நல்ல பரிசளிப்பார்கள். பெரிய குற்றம் செய்தால் பெரிய பரிசு உண்டு. நான் பாஜகவுடன் இருந்த போது 12 ஆயிரம் முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு  போட்டது கூட அவர்களுக்குத் தெரி யாது. அவர்கள் வாக்கு இல்லா மல் நான் வெற்றி பெறவே முடி யாது.

பாஜக-வுக்கு ஓட்டு வேண்டு மென்றால் தலித்துகளின் கால் களைக் கழுவி விடுவார்கள். அந்தத் தண்ணீரையே குடிப்பார்கள். ஆனால் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் பிணத்தை நள்ளி ரவில் எரிப்பார்கள். குற்றவாளி களை பாஜக காப்பாற்றும். பாஜக-வில் இப்போது 3 லாபி கள் உள்ளன, ஒன்று யோகி ஆதித்ய நாத் – ஆர்எஸ்எஸ் லாபி. 2. அமித் ஷா – கேஷவ் மவுரியா லாபி, 3-வது லாபி, பிராமணர்கள். இந்த 3 லாபி களில் ஒன்று யோகியைத் தோற்க டிக்க பணியாற்றி வருகிறது, இன்னொரு லாபி பாஜக வெல்ல வேண்டும் என்று பணியாற்றும், 3-வது லாபி ஒரு பிராமணரை முதல்வராக்க வேண்டும் என்று பார்க்கிறது. ஆனால் 100 சதவிகிதம் உறுதி யாகக் கூறுகிறேன் அகிலேஷ்ஜி முதல்வராவார். பாஜக-வை வெளி யேற்ற அகிலேஷினால்தான் முடி யும். காங்கிரஸ், பகுஜன் கட்சி களால் முடியாது.”  இவ்வாறு ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button