இந்தியா

பழங்குடி மக்களுக்கு வேலை தருகிறார்களாம்… இலுப்பைப் பூவிலிருந்து சாராயம் தயாரிக்கும் ம.பி. பாஜக அரசு!

போபால், நவ.24- இலுப்பைப் பூவிலிருந்து சாராயம் தயாரித்து விற்ப தென மத்தியப் பிரதேச மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பழங்குடி யின மக்களுக்கு வேலை வாய்ப்பும், வருமானமும் கிடைக்கும் என்று மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ ராஜ் சிங் சவுகான் தெரிவித் துள்ளார். ம.பி. மாநிலத்தின் மாண்ட்லா மாவட்டத்தில் நடைபெற்ற ‘ஜன்ஜாதியா கவுரவ் திவாஸ்’ நிகழ்ச்சியில் சவுகான் பேசி யுள்ளார். அப்போது, “புதிய கலால் கொள்கையின்படி, பாரம்பரிய வழியில் இலுப்பை பூவில் இருந்து தயாரிக்கப் படும் சாராயம் இனி சட்ட விரோதம் ஆகாது. இது ‘பாரம் பரிய மதுபானம்’ என்ற பெய ரில் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும்.

இலுப்பைப் பூ பயன்படுத்துவ தன் மூலம் அது பழங்குடி யின மக்களுக்கு வேலை வாய்ப்பையும், வருமானத் தையும் ஏற்படுத்தித் தரும்” என்று கூறியுள்ளார். பாஜக தலைமையிலான மத்தியப் பிரதேச அரசாங்கத் தின் பாரம்பரிய மதுபான விற் பனை முயற்சியை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர் சித்துள்ளன. இது பாஜகவின் தார்மீக வீழ்ச்சி என்று காங்கி ரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே. மிஸ்ரா கூறியுள்ளார். “சமீபத்தில் கள்ளச் சாரா யம் குடித்து 50-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்த நிலை யில், மூலிகை சாராயத்தை சட்டப்பூர்வமாக்கும் முடிவை அரசு எடுத்திருப்பது துர திர்ஷ்டவசமானது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button