இந்தியா

திருட்டுப் பட்டம் கட்டி தலித் சிறுமி மீது தாக்குதல்!

லக்னோ, டிச.30- உத்தரப்பிரதேச மாநிலத் தில் தலித் சிறுமி திருடியதா கக் கூறி, அந்த சிறுமியை கொடூரமாகத் தாக்கிய சம்ப வம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பர விய நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரி யங்கா காந்தியும் அந்த வீடி யோவை தனது டுவிட்டர் பக் கத்தில் பகிர்ந்துள்ளார். அமேதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் அந்தச் சிறு மியை, இரண்டு கொடூர மனி தர்கள், தரையில் படுக்க வைத்து கால் பாதங்களில் கட்டையால் தாக்கும் காட்சி வீடியோவில் இடம்பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலித் வகுப்பைச் சேர்ந்த சிறுமி யின் குடும்பத்தினர் திருட்டில் ஈடுபட்டதாகவும், அதற்கு தண்டனை வழங்குவதற்கா கவே இவ்வாறு சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள் ளதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரி வித்துள்ள பிரியங்கா காந்தி, “யோகி ஆதித்யநாத் சார், உத்தரப் பிரதேசத்தில் தலித் துக்களுக்கு எதிரான வன் முறையில் தினமும் 34 பேர் பாதிக்கப்படுகின்றனர். அடுத்த 24 மணி நேரத்தில் தாக்கியவர்களின் மீது நட வடிக்கை எடுக்கவில்லை எனில், காங்கிரஸ் கட்சி தூங்கிக் கொண்டிருக்கிற உங்கள் ஆட்சியை தட்டி எழுப்பும்” என தெரிவித்துள்ளார். இதனிடையே, அமேதி பகுதி காவல்துறை அதிகாரி அர்பித் கபூர் தாக்குதலில் ஈடு பட்டவர்கள் மீது போக்சோ மற்றும் எஸ்.சி, எஸ்.டி வன் கொடுமை சட்டத்திலும் வழக் குப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button