இந்தியா

சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்துக!

புதுதில்லி,பிப்.3- 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதி யுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசு களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செய லாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். இந்தியாவை பொரு த்தமட்டில் இதுவரை மாநிலங்களுக்கு 166.68 கோடி தடுப்பூசிகள் ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப் பட்டுள்ளது. உலகிலேயே மிகஅதிக மானது இது. 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்தியாவில் கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இன்று வரை இந்த வயதுடைய 4.66 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வருவ தால் 28 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும். எனவே ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிறார்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக தினமும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். மாவட்ட அளவில் இதேபோன்று மறுஆய்வு செய்ய வேண்டும். 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட இரண்டா வது டோசுக்கு உரிய பயனாளிகள் பற்றிய தரவு கோவின் இணைய தளத்தை அணுகலாம். எனவே அனைத்து மாநில அரசுகளும் தங்களு டைய மாநிலத்தில் பதினைந்து வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பயனாளி களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button