இந்தியா

கடவுளை இழிவுபடுத்திவிட்டதாக நடிகை மீது ம.பி. பாஜக அரசு வழக்கு

போபால், ஜன. 28 – தொலைக்காட்சி நடிகை ஒருவர், பட விளம்பர விழாவில் நகைச்சுவைக்காக கூறிய கரு த்தை பாஜக-வினர் சர்ச்சை யாக்கிய நிலையில், மத்தியப் பிரதேச மாநில அரசும் அந்த நடிகை மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற இந்தி வலைத் தொட ரின் (Web Serids) விளம்பர நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை யன்று நடந்தது. இதில், அந்த தொலைக்காட்சி தொடரில் நடித்திருக்கும் ஸ்வேதா திவாரி (41) பங்கேற்றுள்ளார். ‘பேஷன்’ துறை பற்றிய தொலைக்காட்சி தொடர் என்ப தால், அதுதொடர்பாக எழுப்பப் பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். இந்த வலைத் தொடரில், பெண்களின் உள்ளாடை வடி வமைப்பாளராக, சவுரவ் ராஜ் ஜெயின் நடித்துள்ளார். இவர் ‘மகாபாரதம்’ தொடரில் கிருஷ்ண ராக நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், நடிகை ஸ்வேதா திவாரியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘’வெப் தொடரில் என் உள்ளாடைகளை கடவுள்தான் அளவெடுத்தார்’’ என்று கூறியுள்ளார். அதாவது, மகாபாரதம் தொடரில் கடவுள் கிருஷ்ணராக நடித்த சவுரவ் ராஜ் ஜெயின், இதில் உள்ளாடை வடி வமைப்பாளராக நடித்திருப்ப தையே நகைச்சுவையாக ஸ்வே தா திவாரி குறிப்பிட்டுள்ளார். ஆனால், வழக்கம்போல பாஜக-வினர் கொதித்தெழுந்த னர். நடிகை ஸ்வேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூப்பாடுபோட ஆரம்பித்தனர். ம.பி. பாஜக அரசின் உள்துறை அமைச்ச ரான நரோட்டம் மிஸ்ராவும், “எந்தச் சூழலிலும் கடவுளை அவமதிக்கும் ரீதியிலான கருத்து களை பொறுத்துக்கொள்ள முடி யாது” என்று பேச்சுக்கு கண்ட னம் தெரிவித்ததுடன், “இதுதொடர்பாக 24 மணி நேரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போபால் காவல் துறையினர் ஸ்வேதா திவாரி மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button