இந்தியா

உ.பி.யில் பாஜக வேட்பாளரான அமலாக்கத்துறை அதிகாரி!

லக்னோ, பிப்.3- அமலாக்கத்துறையில் பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி, விருப்ப ஓய்வுபெற்ற கை யோடு, பாஜக வேட்பாளராக மாறியுள்ளார். அமலாக்கத் துறையின் இணை இயக்கு நராக பணியாற்றி வந்தவர் ராஜேஷ்வர் சிங். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகி யோருக்கு எதிரான ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் உள்ளிட்ட வழக்குகள், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மீதான வழக்குகளை விசாரித்தவர் ஆவார்.

அண்மையில் இவர் விருப்ப ஓய்வுகேட்டு கடிதம் எழுதிய நிலையில், அரசும் உடனடி யாக அவரை பணியிலிருந்து விடுவித்தது. இதற்காக, பிரதமர் மோடி உள்துறை அமைச் சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ஆகி யோருக்கு நன்றி தெரிவித்த ராஜேஷ்வர் சிங், தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் சரோ ஜினி நகர் தொகுதி பாஜக வேட்பாளராக அறி விக்கப்பட்டு உள்ளார். தற்போதைய பாஜக எம்எல்ஏ ஸ்வாதி சிங்கிற்கு சீட் மறுக்கப்பட்டு, அந்த தொகுதி ராஜேஷ்வர் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜேஷ்வர் சிங் பாஜக வேட்பாளராகி இருப்பது குறித்து கருத்து தெரி வித்துள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “விஆர்எஸ் வாங்கிவிட்டு, பாஜகவில் சேர்ந்து வேட்பாளராவது துணை கம்பெனியிலிருந்து, தாய் கம்பெனியில் இணைவது போல் உள் ளது” என விமர்சித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button