இந்தியா

உத்தரகண்ட், மணிப்பூரில் காங். – பாஜக இடையே இழுபறி…

பனாஜி, ஜன.11- உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் என 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை நடை பெறவுள்ளது. இதில், பாஜக தற்போது ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் உத்தரப்பிர தேசத்தைத் தவிர்த்து, உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் அக்கட்சி கடும் போட்டியை எதிர் கொள்வதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பிப்ரவரி 14 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள கோவா மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பாஜக-வைத் தோற்கடிக்கும் என்று பெயர் வெளி யிட விரும்பாத மூத்த அரசியல் வல்லு நர் கூறியுள்ளார். “மொத்தமுள்ள 40 இடங்களில் காங்கிரஸ் 20 இடங்களை வெல்லும். பாஜக 15, மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி (எம்ஜிபி) 3 அல்லது 4, ஆம் ஆத்மி ஒன்று அல்லது இரண்டு இடங் களை வெல்லும்” என்று அவர் தெரி வித்துள்ளார். கோவா முன்னாள் தேர்தல் ஆணையர் பிரபாகர் திம்பிலோவும் இதையே குறிப்பிட்டுள்ளார்.

“கோவா வில் அடுத்த ஆட்சியை காங்கிரஸ் அமைக்கும். பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். உட்கட்சியிலும் மோதல்கள் உள் ளன. எனவே இதெல்லாம் பாஜக-வுக்கு எதிராக திரும்பும். காங்கிரஸ் கட்சி 20 முதல் 22 இடங்களை வெல்லும்” என்று கூறியுள்ளார். ஆனால் ஏபிபி – சிவோட்டர் கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 23 இடங்களும் காங்கிரசுக்கு 8 இடங்களும் ஆம் ஆத்மிக்கு 9 இடங்க ளும் மகாராஷ்டிரா கோமந்தக் கட் சிக்கு 6 இடங்களும், மற்றவர்களுக்கு 4 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் மணிப்பூரிலும் பாஜக – காங்கிரஸ் இடையே இழு பறி ஏற்படலாம் என்று தெரியவந்துள் ளது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்த முள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவுக்கு 23 முதல் 27 இடங்கள் வரை கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சி 22 முதல் 26 இடங்களைப் பெற லாம் என்று ‘ஏபிபி – சிவோட்டர்’ கூறி யுள்ளது. இதேபோல பிப்ரவரி 14 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள உத்தரகண்ட் மாநிலத்திலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கழுத்துப்பிடி போட்டி ஏற்படலாம் என்று ‘ஏபிபி – சிவோட்டர்’ தெரி வித்துள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட்டில் ஆளும் பாஜக 31 முதல் 37 இடங்களைப் பிடிக்கும். காங்கிரசுக்கு 31 முதல் 36 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு பிப்ரவரி 14 அன்று தேர்தல் நடைபெறும் நிலை யில், மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 52 முதுல் 58 தொகுதிகளைக் கைப்பற்றும். காங்கி ரஸ் 37 முதல் 43 இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு பாஜக வுக்கு அதிகபட்சம் 3 இடங்கள் மட்டுமே கிடைக்கலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button