இந்தியா

அமெரிக்காவின் தடைகளால் தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு!

புதுதில்லி, மார்ச் 11 – ரஷ்யா – உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவைச் சந்திக்கத் துவங்கியுள்ளது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 77 ரூபாய் என்ற அள விற்கு இறங்கியுள்ளது. இது வரும் வாரங் களில் 80 ரூபாய் அளவிற்கு வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக தரமதிப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்குப் பயந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் இறங்கினால், குறிப்பாக, ரஷ்யா – ஜெர்மனி எரிவாயு குழாய் மூடப் பட்டால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 300 டாலருக்கும் அதிகமாகி விடும் என கூறப்படுகிறது.

அதற்கேற்பவே முன்பேர வர்த்தகத்தில் 118 டாலர், 125 டாலர் என கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு மதிக்கு தடை விதிப்பது பற்றி, அமெரிக்கா வும், ஐரோப்பிய கூட்டணி நாடுகளும் ஆலோ சனை நடத்தியதற்கே, கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அவ்வாறிருக்க, ரஷ்யா மீதான அமெரிக்கா மற்றும் கூட்டாளி நாடுகளின் பொருளாதாரத் தடை தீவிரமாகும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துத்தான், ரஷ்யா விலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அனைத்து கச்சா எண்ணெய் இறக்குமதி யையும் படிப்படியாக நிறுத்த இருக்கிறோம் என பிரிட்டனும் அறிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதி கரிக்கும் என ‘பாங்க் ஆப் பரோடா’, ‘மார்கன் ஸ்டான்லி’, ‘டிடி செக்யூரிட்டீஸ்’ என பல நிறுவனங்களின் ஆய்வுகள் எச்சரித்துள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு கணிக்க முடி யாத அளவு இருக்கும்; ஒரு பீப்பாய்க்கு 300 டாலர்கள் வரை உயரக்கூடும் என ‘ராய்ட்ட ர்ஸ்’ ஆய்வறிக்கையும் குறிப்பிட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பு கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தப்போகிறது என்பதுடன், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பண வீக்கத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது எண்ணெய் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.

“இந்தியா உட்பட உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை, உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் பாதித்துள்ளது. இந்தியா தனது தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்தே பயன்படுத்துவதால், அதிகரித்து வரும் விலைவாசி இந்திய குடும்பங்களின் வாங்கும் திறனை பாதித்துள் ளது. ஏற்கனவே இந்தியாவின் பணவீக்கம் 6 சத விகிதத்தை தொடும் நிலையில் உள்ளது. இது ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு மேலாக உள்ளது. எனவே அதிகரித்து வரும் விலைவாசி என்பது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்குவிக்கக் கூடும்” என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் எச்சரித்துள்ளார். “டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 76 ரூபாய் 43 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள் ளது. சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 116. 43 டாலருக்கு வா்த்தகமானது. எனவே, கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று சர்வதேச நாணய நிதிய மேலாண் இயக்குநர் கிறிஸ்ட லினா ஜார்ஜியாவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button