தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (27.02.2023) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இத்தேர்தலில் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து திருமகன் ஈ.வெ.ராவை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்ததை நன்றியோடு நினைவு கொண்டுள்ளோம். தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் திருமகன் ஈ.வெ.ரா. முனைப்போடு செயல்பட்டதையும், இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டிய வயதில் இயற்கை அவரைப் பறித்துக் கொண்டதையும் தொகுதி மக்கள் நெஞ்சம் நெகிழ கூறியதை மறக்க இயலாது.

மதவாத அரசியலையும், மனிதர்களைப் பிளவுபடுத்தும் சாதிய வேறுபாடுகளையும் உறுதிபட எதிர்த்துப் போராடி வரும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளராக, மக்களின் நன்மதிப்பு பெற்ற தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். தொகுதி மக்களுக்கு மகன் ஆற்றிய பணியினை நிறைவு செய்யும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மாநில உரிமைகளையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க முன்வரிசைப் போராளியாகச் செயல்படுவார் என்பதை அனைவரும் அறிவர்.

சுயநல அரசியலை விலக்கி, மக்கள் நலன் பேணும் நேர்மறை அரசியல் பயணம் வலிமையும், பொலிவும் பெற, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்கள் “கை” சின்னத்தில் வாக்களித்து, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button