தமிழகம்

இந்தியத் தாய் பெற்றெடுத்த சிங்கக்குட்டிகளே, லால் சலாம்!

கே சுப்பராயன் MP

மார்ச் 23!

படுபாதகப் பிரிட்டானியக் கோழைகளால், தூக்கிலேற்றிக் கொல்லப்பட்ட மாவீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவுதினம் இன்று!

விக்டோரியா மகாராணியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு, விடுதலையான கோழை சாவர்க்கர் வாழ்ந்த அதே நாளில், நிமிர்ந்து நின்று,

“நானும் எனது தோழர்களும் பிரிட்டானிய ஏகாதிபத்தியத்திற்
கெதிராக போர்தொடுத்துள்ளோம். எனவே, தூக்கில் போடாதே, கோழைகளல்ல நாங்கள்! இந்தியாவின் விடுதலைப் போரின் போர்வீரர்கள்! எங்கள் நெஞ்சை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொல்! தூக்கிலேற்றும் இழிவுச் சாவு எங்களுக்கு வேண்டாம்!”

என்று, பிடரி மயிர் குலுங்கிட முழங்கிய இந்தியத் தாய் பெற்றெடுத்த
சிங்கக்குட்டிகளே, லால் சலாம்!

சோசலிச இந்தியாவை படைக்க விரும்பி உயிர் கொடுத்த சொக்கத்தங்கங்களே, கொடுமையை என்னவென்று சொல்ல ?

மகாராணியிடம் மண்டியிட்ட கும்பல், இந்தியர்களை சாதி, மத ரீதியாக பிளவுபடுத்தி, பிரிட்டானிய மகாராணிக்குத் தொண்டூழியம் புரிந்த கும்பல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதே..!

பகத்சிங்கின் பரம்பரையினர் தேசவிரோதிகளாம்! உயிர்பிச்சை வேண்டி மண்டியிட்ட சாவர்க்கர் பரம்பரை தேசபக்தர்களாம்!

தூக்குக்கயிறு கழுத்தை இறுக்கியபோதும் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழங்கிய முழக்கம் இந்தியாவைத் தட்டி எழுப்பும்! அந்த முழக்கம் இன்றும் காற்றோடு காற்றாக கலந்து நிற்கிறது!

தேர்ந்தெடுக்க வேண்டிய வழி எது?

உயிர் பிச்சைக்காக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுப் பிழைத்த சாவர்க்கரின் தேசவிரோத வழியா? நெஞ்சில் சுடு! எங்களுக்கு உயிர் பெரிதல்ல நாடு பெரிது என்று நெஞ்சைத் திறந்தபடி நின்ற பகத்சிங்கின் தேசபக்த வழியா?

சிந்திப்பீர்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button