தமிழகம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு: தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (26.09.2022) கலைவாணர் அரங்கத்தில் கேரள மாநில உணவு மற்றும் நுகர்பொருள் துறை அமைச்சர் ஜி ஆர் அணில் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டு அழைப்பிதழை வழங்கினார்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன், மாநில துணைச் செயலாளர்கள் நா பெரியசாமி மற்றும் மு வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button