Janasakthi
-
தமிழகம்
இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றுதிரட்டுக – கே சுப்பராயன் MP அறைகூவல்
தோழர் கே சுப்பாராயன் MP முகநூல் பதிவில் இருந்து… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு சோகம் ததும்பிய, வீரம் கொப்பளித்த வரலாறாகும்!…
Read More » -
கட்டுரைகள்
ஏழைகளுக்கு எதிரான, கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட் 2022 – 2023
டி.ராஜா கார்ப்பரேட் மற்றும் பெருநிறுவனங்களிடம் பா.ஜ.க அரசாங்கம் கொண்டிருக்கும் விசுவாசத்தை மீண்டும் ஒருமுறை அழுத்தந் திருத்தமாகப் பதிவு செய்கிறது ஒன்றிய பா.ஜ.கஅரசாங்கத்தின் 2022 – 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை. அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு, புதிய தாராளமய கொள்கைகளே தேசத்தின் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்றும், பா.ஜ.க அரசாங்கத்தின் பொருளியல் நிலைப்பாட்டையும், அதன் கொள்கை திசைவழியையும் இந்த நிதிநிலை அறிக்கை மீண்டும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. தனியார்துறை வளர்ச்சிக்கு அதிக உத்வேகம் வழங்கப்படுவதும், பொதுத்துறை மற்றும் சமூகநலன் சார்ந்த துறைகள் முற்றாகப் புறக்கணிக்கப்படுவதும் இந்த அரசாங்கம் ஸ்தாபிக்க விரும்பும் பொருளாதார மாதிரியின் சிறப்பு அம்சங்கள் ஆகும். இந்த அரசாங்கம் யாருக்கு சேவை புரிந்திட விழைகிறது என்பதையும், அதன் உள்நோக்கங்களைக் கருத்தில் கொண்டு அணுகும் போது, இந்த நிதிநிலை அறிக்கை முன்னிறுத்தும் அரசியலை நாம் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய வேலைவாய்ப்பு கட்டமைப்பு மிகப்பெரிய அளவிற்கு விவசாயம் மற்றும் அது சார்ந்த இதர தொழில் நடவடிக்கைகளைச் சார்ந்துள்ளது. ஆனால், தற்போது விவசாயத் துறையின் நிலை மோசமடைந்து வருகிறது. கடந்த 2020 -21 ஆம் ஆண்டில் 20.2 சதவிகிதமாக இருந்த விவசாயத் துறையின் மொத்த மதிப்பு சேர்ப்பு (Gross Value Added) 2021 – 22 ஆம் ஆண்டில் 18.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஊரகப் பொருளாதாரம் இடர்பாடுகளின்றி இயங்கிட, தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட, விவசாயத் துறையில் அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆனால், இந்த அடிப்படைப் புரிதலுக்கு எதிரான நிலைப்பாட்டை பா.ஜ.க அரசாங்கம் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் குறைத்துள்ளது. விவசாயத்துறை நெருக்கடியை எதிர்கொண்டு சமாளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2021 – 22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் திருத்திய மதிப்பீட்டின்படி 4,74,750.47 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீடு 3,70,303 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, நிதி ஒதுக்கீடு சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகம்
நீட் சட்டமுன்வடிவு – தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு
இன்று 5/02/2022 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் நீட் விலக்கு தொடர்பான…
Read More » -
ஆளுநர் பதவி – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை நிலை என்ன?
தோழர் கே.சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து… ஆளுநர் பதவி என்பது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை உளவு பார்க்கவும், இடையூறு செய்யவுமே…
Read More » -
விளையாட்டு
ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா தமிழ்நாடு?
புரோ கபடி தொடரின் 8-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பார்ம் பிரச்சனை காரணமாக சொதப்பலாக விளையாடி வந்த தமிழ்நாடு அணி…
Read More » -
விளையாட்டு
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஆஸி., கிரிக்கெட் வாரியம் அனுமதி
வரும் மார்ச் மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் மண்ணில் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி-20 என மூன்று…
Read More » -
விளையாட்டு
முகமது ஹஸ்னைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீர ரான முகமது ஹஸ்னைன் (21) தனது இளமைக்கு ஏற்ப பந்துவீசக்கூடி யவர். அதாவது சாதாரணமாக…
Read More » -
இந்தியா
ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகான் புல்லரிப்பு பிரதமர் மோடியிடம் கடவுளின் அம்சங்களைக் காண்கிறேன்
பனாஜி, பிப். 4 – பிரதமர் நரேந்திர மோடியிடம், மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் அம்சத்தைக் காண்பதாக மத்தியப் பிரதேச பாஜக…
Read More » -
இந்தியா
2021ல் மட்டும் 108 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் 6 பேர் படுகொலை இந்தியாவில் மோசமாகி வரும் பத்திரிகை சுதந்திரம்
புதுதில்லி, பிப். 4 – உரிமைகள் மற்றும் இடர் பகுப்பா ய்வுக் குழு, (Rights and Risks Analysis Group –…
Read More » -
இந்தியா
அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி: ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார்!
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தார் என்பது தெரிந்ததே.…
Read More »








