
தவெக தலைவரும், தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான விஜய், கரூரில் நடத்திய சாலை வழிக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, அவரைக் காண்பதற்காக வந்த 41 பேர் இறந்த துயரம் நிகழ்ந்த நாள் 27.9.2025.
தமிழ் நாடு அரசு இதுபற்றி நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்ததும் அதே நாளில்தான்.
இதுகுறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நேர்மையான காவல்துறை அதிகாரி என அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்ட நாள் 3.10.2025.
இதனை எதிர்த்தும், மத்தியப் புலனாய்வுத் துறையின் (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது இடைக்கால உத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நாள் 8.10.2025.
அது இடைக்கால உத்தரவுதான் என்றாலும், விசாரணையை சிபிஐக்கு மாற்றியது உள்ளிட்டு காத்திரமான பல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும், விசாரணையின் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால் அந்தத் தீர்ப்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள், பல எதிர் கேள்விகளை மக்களின் மனங்களில் உலா வரச் செய்துள்ளன.
சிபிஐ விசாரணை உத்தரவுக்கான உச்சநீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள் வருமாறு :
- இந்தச் சம்பவம் “நாட்டின் மனச்சாட்சியே அதிர்ந்தது” என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. இத்தகைய கடுமையான சம்பவத்தில் குடிமக்களுக்கு நியாயமான மற்றும் சார்பற்ற விசாரணை கிடைப்பது அவர்களின் உயிர், சுதந்திர உரிமைகளின் ஒரு பகுதியாகும் எனவும் தீர்ப்பளித்தது.
- கரூர் நகரக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்-ஐ, சிபிஐக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல் பரிமாணங்களும் ஊடகச் செய்திகள் காரணமாகவும், விசாரணை மீதான பொதுமக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க சிபிஐ போன்ற மத்திய, சார்பற்ற அமைப்பு மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும் என விளக்கம் கூறப்பட்டுள்ளது.
சிபிஐ என்பது சார்பற்ற அமைப்பு என்றால், மாநிலக் காவல்துறை சார்புள்ள அமைப்பு என்று உச்சநீதிமன்றம் கருதுகிறதா?
![]()
![]()
- விசாரணையில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையும் உறுதி செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையில் மூன்று உறுப்பினர் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
- சிபிஐ விசாரணையைக் கண்காணித்து அறிக்கைகளைப் பெற, தமிழ்நாட்டில் பணிபுரிந்த, ஆனால் தமிழரல்லாத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
- மதராஸ் உயர் நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகள் முரண்பட்ட தீர்ப்புகள் அளித்தன; சென்னை அமர்வு தானாகவே வழக்கை எடுத்தது தவறு” என்கிறது உச்ச நீதிமன்றம் .
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
- “இந்த வழக்கு மதுரை அமர்வின் அதிகார வரம்புக்குள் வருவதால், பிரதான அமர்வு, விசாரணைக்கு எடுத்தது தவறு” என்பதால் தீர்ப்பை ரத்து செய்கிறது உச்சநீதிமன்றம். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
- மாநில அதிகாரிகள் பத்திரிகைச் சந்திப்புகளில் தங்களைப் பாதுகாக்கும் வகையில் பேசியதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
- “உரிய ஆவணங்கள் அல்லது ஆதாரங்கள் இல்லாமல் உத்தரவுகள் வழங்கப்பட்டன” என்கிறது உச்சநீதிமன்றம்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
- “தவெக கட்சியும் அதன் தலைவரும் குறித்த கடுமையான குறிப்புகள் அவர்களுக்குப் பதிலளிக்க வாய்ப்பு அளிக்காமல் செய்யப்பட்டன. இது இயற்கை நீதிக் கொள்கையை மீறுகிறது” என்கிறது உச்ச நீதிமன்றம்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()