கட்டுரைகள்

‘வேடன்’- இசை வடிவில் ஓர் இடது குரல்

மு.வீரபாண்டியன்

வேடன் கேரளாவின் ‘ராப் பாடகர்’. இவரது மேடைப் பாடல்கள் தனித்துவமிக்கவை. தானே பாடல் எழுதி தானே இசைத்துப் பாடுகிறார். இவரது பாடல்கள் கேரளா மட்டுமல்ல இந்தியா முழுவதும் பரவி வருகின்றன.

இவரது இயற்பெயர் ஹிரன்தாஸ். அவர் தனக்குத் தானே சூடிக்கொண்ட பெயர் வேடன் என்கிறார். கடலில் மீன் பிடிக்கும் போது கைவில்லால் குறிபார்த்து மீன் மீது ஏவும் வில்லுக்கும் வேடன் என்ற பெயர் உண்டாம்.

யாழ்ப்பாணத் தாய்க்கும் கேரளத் தந்தைக்கும் பிறந்த எளிய இளைஞன் இவர். இவர் மேடை ஏறிப் பாடினால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அலைமோதுகிறார்கள். ‘வாய்ஸ் ஆப் த வாய்ஸ் லெஸ்’ என்ற இவரது பாடலாகட்டும் மஞ்சும்மல் பாய்ஸ் சுதந்திரம் என்கிற பாடலாகட்டும் கேரளாவின் எட்டுத் திக்கும் தாண்டி இன்று நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

‘இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு முகமை’மற்றும் இந்தியாவின் உள்துறை அமைச்சகம் இவரது பாடல்களை வரிக்கு வரி உற்றுக் கேட்கிறது. இவரை எப்படிக் கைது செய்வது எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

இவரைக் கைது செய்ய வேண்டும் என பிஜேபி பாலக்காடு கவுன்சிலர், உள்துறைக்கும் தேசியப் பாதுகாப்பு முகமைக்கும் கடிதம் எழுதி உள்ளார். கேரளாவின் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி இவரை நாடு கடந்த தீவிரவாதி போல் பார்க்கிறது.

‘பூமி நான் வாழும் இடம்’ என்ற பாடலில் அவர் ஆதிக்க வர்க்கத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறார். இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் தலித் மக்கள் சிறுபான்மை மக்கள் உரிமைகள் மீது கட்டப்படுகின்றன.

பார்பலா மற்றும் சாதிய மேலாதிக்கச் சக்திகளைத் தோல் உரிக்கிறது. கடவுள் மற்றும் கோயில்களுக்கு மேல் நாடும் மனிதமும் எனப் பேசுகிறது. இதுதான் இந்து அடிப்படைவாதிகளுக்குக் கோபத்தை உருவாக்குகிறது.

சமீபத்தில் பாலக்காட்டில் இடது முன்னணியின் விழாவில் அவர் பாடும் போது லட்சக்கணக்கான மக்கள் அலைமோதினார்கள். அதிலும் இளைஞர்கள், படித்த அறிவு நிறைந்த இளைஞர்கள் இப்படி இந்த எளிய இளைஞனிடம் அலைமோதுவது ஏன்? அவன் எளிய கேரள மலையாள மொழியில் பேசுகிறான். அவனது மெட்டும் வார்த்தைகளும், விடுதலையின் பக்கமாகப் பேசுகிறது.

இது பொறுக்காமல் – வேடனை வளரவிட்டால் அவனால் இந்து மதம் பிளவுபடுமாம். இந்து மதத்திற்குள் பிரிவினை தூண்டுமாம். எனவே தேசியப் பாதுகாப்பு வேடனைக் கைது செய்ய வேண்டுமாம்.

வேடன் பாடல்களில் சில நேரங்களில் சர்வதேசியம் வெளிப்படுகிறது. போரை வேடன் பாடல்கள் எதிர்க்கின்றன. அமைதியும், மனித நட்பும் கோருகிறது.

இங்கல்ல, உலகெங்கும் ராப் பாடல்கள் பெரும்பாலும் வெள்ளை இனத்தவர்கள்தான். குறிப்பாக அமெரிக்காவில் புகழ் பெற்ற கிசி/ ஞிசி குயின் டென் டெல்லின் கன்ஸ், என்.ரோஸ் இப்படியாக புகழ்பெற்ற ராப் இசைக் குழு முழுவதும் வெள்ளையர்கள்தான்.

இதில் பிரம்மாண்ட திருப்புமுனை மைக்கேல் ஜாக்சன். இந்தக் கறுப்பினக் கலைஞன் மேடை ஏறிய போதுதான் பாப் இசைகளில் ஓர் புரட்சியே ஏற்பட்டது.

பாடிக்கொண்டே ஆடுவது ஆட்டத்தில் மகிழ்ச்சி மட்டுமல்ல கறுப்பின மக்களின் உரிமைக் குரலும் வெளிப்பட்டது. ஆதிக்கம், நிற பேதம், போர், சுரண்டல் என மானிட விரோதங்களை இவரது பாடல்கள் தோல் உரித்தது. இதனால் ஏராளமான சோதனைகளும் இந்த பாப் பாடகர் சந்திக்க வேண்டி இருந்தது.

எங்கேயும் ஆளும் வர்க்கமும், ஆதிக்கச் சக்திகளும் பாடல்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். கவிதைகளைக் கண்டு அஞ்சுகிறார், திரைப்பட நடிப்பைக் கண்டு அஞ்சுகிறார்கள், விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களைக் கண்டும் அஞ்சுகிறார்கள். அதிலும் விளையாட்டு வீரர்களும், திரைப்பட நடிகர்களும், பாடகர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களும் விடுதலையின் பக்கமும், சமத்துவத்தின் பக்கமும் நிற்கும் போது அவர்கள் குரல் இட்டதாக மாறுகிறது.

அவர்கள் இப்படித்தான். சாப்ளின் இப்படித்தான். முகமது அலி இப்படித்தான். பாப்லோ நெருடா இப்படித்தான். மைக்கேல் ஜாக்சன் இப்படித்தான். இந்த வரிசையில்தான் சப்தர் ஹஸ்மி வரவர ராவ், கத்தார், கோவன், தற்போது வேடன்.

அனைத்துக் குரலும் இடது குரல்தான். நிறைவில் இந்தக் குரல்கள்தான் வெல்லும்!
வேடன் வெல்லட்டும். வேடன் தோழன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button